Tag Archive: tamil poem


இதுவரை எந்த கவிதை நூல் வெளியீட்டுு விழாவிற்கும் நான் சென்றதில்லை ஆகையால் கவிஞர் மனுஷ்யபுத்திரனின் ‘இதற்கு முன்பும் இதற்குப் பிறகும்’ என்ற கவிதை புத்தக வெளியீட்டு விழாவிற்கு எப்படியாவது சென்றுவிட வேண்டும் என்று மிகுந்த ஆவலுடன் காத்திருந்தேன்.

பல்லாவரத்தில் ஒரு வேலை இருந்ததால் அதை அவசரமாக முடித்துவிட்டு அங்கிருந்து நேராக தேவநேய பாவாணர் நூலகத்திற்கு விரைந்து சென்று சேர்வதற்குள் எஸ்.ராமகிருஷ்ணன் பேசி முடித்துவிட்டிருந்தார்.

நா முத்துக்குமார் பேசிகொண்டிருந்தார். பேசிய அனைவரும் மிகச்சிறப்பாக பேசினார்கள் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. எனக்கு பிடித்த கவிஞர் பிரமீள், கவிஞர் மனுஷ்யபுத்திரனின் கவிதைகளையும் நான் நிறைய படித்துள்ளேன். இவ்விழாவில் கிடைத்த அனுபவம் கவிஞர் மனுஷ்யபுத்திரனின் கவிதைகளை இன்னும் ஆழமாக படிக்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துகிறது.

விழாவிற்கு வந்திருந்த வாசகர் ஒருவர் எழுத்தாளர் சாரு பேசி முடித்தவுடன் அவருக்கு ஒரு மோதிரத்தை அணிவித்து அசத்தினார்.

மனுஷ்யபுத்திரன் பேசும்போது எழுத்தாளர் சுந்தர ராமசாமியை பற்றி ஒரு சம்பவத்தை கூறினார் எனக்கு வியப்பாக இருந்தது. தமிழ் எழுத்துலகில் ஜாம்பவானாக கருதப்படும் அவர் எப்படி இது போன்ற ஒரு காரியத்தை செய்தார் என்று தெரியவில்லை ஏன் அவருக்கு ஒரு சிறந்த கவிஞனின் கவிதை புத்தகத்திற்கு ஒரு முன்னுரையோ அபிப்ராயமோ சொல்ல மறுத்துவிட்டார்? இது ஒரு சின்ன சம்பவமாக இருந்தாலும் இத்தனை வருடம் கழித்து இதை மனுஷ்யபுத்திரன் நினைவு கூறும்போது கவனிக்கப்படுகிறது.

நம் சமகாலத்தின் சிறந்த கவிஞனான மனுஷ்யபுத்திரனை நாம் கொண்டாடவேண்டும். அவரின் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் சென்றடையவேண்டும் என்று விரும்புகிறேன்.

please click these links to listen the speeches of the guests

மனுஷ்யபுத்திரன்

சாரு நிவேதிதா

பிரபஞ்சன்

தமிழச்சி

பாரதி கிருஷ்ணகுமார்

வசந்த பாலன்

if the links above not working plz click the link below

http://prabhuramakrishnan.podbean.com/

 

plz click here to download the speeches

http://www.filedropper.com/manushyaputhiran

இந்த பதிவுகளில் நடு நடுவே என் சிரிப்பு சத்தம் பயங்கரமாக கேட்கும் தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள் 🙂

அன்புடன்,

பிரபு ராமகிருஷ்ணன்

‘கன்னாடி கோப்பையில் நுரை வராமல் அழகாக பியரை ஊற்றுபவனும் ஒரு கலைஞனே’

என் நண்பன் எழுதிய பின்னூட்டம் “kannadi ku 3 suzhi ண dan varum…neenga beer bodai la ye type panningala? “

-அதற்கு நான் எழுதியது –

“எழுத்து பிழைகளுக்கு மன்னித்துவிடு நண்பா!!
தலையெழுத்தே பிழையாக இருக்க
எழுத்து பிழைக்கு வருந்தி என்ன பயன் எனக்கு.
சுழியும் கோப்பையும் ஒன்றாக கருதி
இரண்டு கோப்பையுடன் நிறுத்திவிட்டேன்.
குடித்துவிட்டு கவிதை எழுத நினைத்தது தவறுதான்
குடித்துவிட்டு பிதற்றினால் அது கவிதையாக முடியுமா?
அது உளறல்தானே?
அதை கவிதையென்று நினைத்தால் நம் நாட்டில் முக்கால்வாசி பேர்
கவிஞர்களே.
உளறலோ பிதற்றலோ என்ன பெயர் வைத்தாலும்
கவிஞனை கொண்டாட மறுக்கும்
இச்சமூகத்தில் வாழ்வதை விட
குடித்து உளறி சாவதே மேல் என்று கருதுகிறேன்.
உன் ஆசைப்படியே இன்னொரு சுழியை சேர்த்துக்கொள்கிறேன்
தலை கிறுகிறுக்க சாய்கிறேன் சொகுசு நாற்காலியில்”

– போதையுடன் பிரபு ராமகிருஷ்ணன்

“துயில் தொலைத்த காரிகை

கவிதை எழுத துடிக்கிறாள்

இவள் கவிதையை படிக்க

தொலைக்க நினைக்கிறேன்

என் துயிலை இன்று”

– பிரபு ராமகிருஷ்ணன்

நேற்று குடும்பத்துடன் திருச்சி சென்றுகொண்டிருக்கும்போது மகிழுந்தில் பாடல்கள் ஒலித்து கொண்டிருந்தன அனைத்தும் தமிழ் பாடல்கள் திடீரென்று எனக்கு பிடித்த உஸ்தாத் நுஸ்ரத் பதே அலி கானின் “அப்ரீன் அப்ரீன்” என்ற பாடலின் ஆரம்ப இசை வந்ததை கேட்டு திடுக்கிட்டேன். எப்படி இந்த சிடீயில் சம்பந்தமே இல்லாமல் இந்த பாட்டு  வருகிறதென்று. பிறகுதான் தெரிந்தது நம் இசையமைப்பாளர் தேவா அந்த ஆரம்ப இசையை அப்படியே கத்தரித்து அவரின் பாடலில் புகுத்தி விட்டார் என்று. ஒரு மாஸ்டர் பீசை கூச்சமே இல்லாமல் திருடுவதற்கு எப்படி தான் மனதுவருகிறதோ இவர்களுக்கு.

ஒரிஜினல் பாடலை இங்கு கேளுங்கள்

Afreen Afreen-Nusrat fateh ali khan

“அரசியல்வாதிகள் கையில் தமிழ்,
இலக்கியவாதிகள் கையில் இன்டர்நெட்,
குரங்கு கையில் பூமாலை”

– பிரபு ராமகிருஷ்ணன்